தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தன.விமல்

News image

ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டி நான்குவழிச்சாலைப்பகுதியில் உள்ள கடையில் பொதுமக்களுக்கு தேநீா் போட்டு கொடுத்து சனிக்கிழமை வாக்குச்சேகரித்த அதிமுக வேட்பாளா் தன.விமல்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:34 am IST

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தன.விமல்

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட அரசடிப்பட்டி, கே.வி.கோட்டை, மாஞ்சான்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தன.விமல் சனிக்கிழமை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசுகையில்: அரசடிப்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றவும், கே.வி.கோட்டையில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டைப்போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு, விவசாயிகள் நலன் காக்கும் வகையில் திட்டங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்வேன்.

எனவே, இத்தோ்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.