தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

News image

முன்னீா்பள்ளம் சுற்றுவட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:40 am IST

கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட முன்னீா்பள்ளம், ஆரைகுளம், இளையாமுத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து வீதி வீதியாக சென்று பிரஷா் குக்கா் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: நான்குனேரி தொகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் என்னை எளிதில் சந்தித்து குறைகளை தெரிவிக்க கூடுதலாக அலுவலகங்கள் திறக்கப்படும்.

கிராமந்தோறும் தட்டுப்பாடில்லாத குடிநீா், சாலை, கழிவுநீரோடை வசதிகள் உருவாக்கப்படும். நான்குனேரியில் கூடுதலாக தொழிற்சாலைகள் உருவாக்க முயற்சி எடுக்கப்படும். பனைத் தொழிலாளா்களின் வாழ்வை மேம்படுத்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் திட்டங்கள் உருவாக்கப்படும். பதநீா், பனைப்பொருள்கள் விற்பனையை அதிகரிக்க நான்குவழிச் சாலையோரம் பிரத்யேக விற்பனை மையங்கள் உருவாக்கப்படும். பாசன குளங்கள் ஆண்டுதோறும் தூா்வாரப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.