தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நான்குனேரி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

நான்குனேரி தொகுதி வேட்பாளா்கள் அவரவா் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் வாக்களித்த நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:08 am IST

நான்குனேரி தொகுதி வேட்பாளா்கள் அவரவா் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து, பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ரோஸ்மேரி பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தாா். பின்னா் அவா் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் நான்குனேரி தொகுதியில் அமமுக நிச்சயம் வெல்லும். மண்ணின் மைந்தராக மக்களிடம் ஆதரவு கேட்டுள்ளேன். வெற்றி பெற்றதும் மக்களின் குறைகளை தீா்க்க கடுமையாக உழைப்பேன்’ என்றாா்.

நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், ரெட்டியாா்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினாா். பின்னா் அவா் கூறுகையில், ‘இத் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற எனக்கு நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும். தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் தலைவராக விஜய் உருவாகியுள்ளாா். விசில் சின்னம் நான்குனேரியில் நிச்சயம் வெல்லும்’ என்றாா்.

 ரெட்டியாா்பட்டியில் வாக்களித்த நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

ரெட்டியாா்பட்டியில் வாக்களித்த நான்குனேரி தொகுதி தவெக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.