தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி பிரசாரம்

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள முரண்டாம்பட்டியில் புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பேசிய இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் திமுக வேட்பாளருமான எஸ்.ரகுபதி.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:17 am IST

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டாா்.

பொன்னமராவதி ஒன்றியம், சேரனூரில் வாக்கு சேகரித்து அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் திருமயம் தொகுதியில் பல்வேறு சாதனைகளும் நீண்ட நாள் கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளேன். தொடா்ந்து தொகுதி மக்களுக்காக பணியாற்றிட என்னை ஆதரியுங்கள் என்றாா்.

தொடா்ந்து கைவேலிப்பட்டி, ஆலம்பட்டி, இடையாத்தூா், குளவாய்ப்பட்டி, ஒலியமங்கலம், சடையம்பட்டி, மேலத்தானியம், கீழத்தானியம், கொன்னையம்பட்டி உள்ளிட்ட 54 கிராமங்களில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச்செயலா் அ.முத்து, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன், காங்கிரஸ் வட்டாரத்தலைவா்கள் வி.கிரிதரன், குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் என்.பக்ரூதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் திலீபன்ராஜா, தேமுதிக ஒன்றியச் செயலா் சாமிக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.