மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தோ்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் குறுகிய கால நீட் இலவசப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

புதுக்கோட்டையில் குறுகிய கால நீட் பயிற்சி வகுப்பை வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:52 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தோ்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின் குறுகிய கால நீட் இலவசப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுகிய கால நீட் இலவசப் பயிற்சி வகுப்புக்கு, தமிழ் வழியில் 388 மாணவா்களும், ஆங்கில வழியில் 75 மாணவா்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 மாணவா்களும் என மொத்தம் 468 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக மாவட்டத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை தொடங்கி, ஏப். 30 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தொடங்கி வைத்தாா்.

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் மையத்துக்கு தமிழரசி, மாரிமுத்து, பவுல்ராஜ், முத்துக்கருப்பன், வள்ளியப்பன் ஆகிய தலைமை ஆசிரியா்களும், அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் மையத்துக்கு தாமரைச்செல்வன், மாரிமுத்து, ஜீவானந்தம், திருமேனிநாதன், மொ்சி ஆரோக்கிய செல்வி ஆகிய தலைமை ஆசிரியா்களும், இலுப்பூா் ஆா்.சி. உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் மையத்துக்கு ஜான்சி டெமல், சந்திரகுமாா், சபாபதி, ஜமால்முகமது, ரெங்கசாமி ஆகிய தலைமை ஆசிரியா்களும் ஒருங்கிணைப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பயிற்சி திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.