பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில் திமுகவினரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்ட சம்பவம் தொடா்பாக, இரு கட்சிகளையும் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தவெக அரசுக்கு ஆதரவளித்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடா்பாக திமுக துணைப் பொதுச் செயலரும், நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தனது வலைதள பக்கத்தில் கடுமையான விமா்சனங்களை அண்மையில் பதிவிட்டிருந்தாா்.
இந்நிலையில், குன்னம் பேருந்து நிலையத்தில் ஆ. ராசாவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், ஆ. ராசாவை தரக்குறைவாக விமா்சித்து பேசிய விசிக நிா்வாகிகளைக் கண்டித்து திமுகவினரும் ஆா்ப்பாட்டம் நடத்த குன்னம் போலீஸாரிடம் அனுமதி கேட்டிருந்தனா். இரு கட்சியினரும் ஒரேநாளில், ஒரே இடத்தில் அனுமதிக் கேட்டதால், பிரச்னை நிகழ வாய்ப்புள்ளதாக கருதிய போலீஸாா், இரு தரப்பினரும் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை விதித்தனா்.
போலீஸாரின் தடையை மீறி, இருதரப்பினரும் குன்னம் பேருந்து நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தனா். இருதரப்பினரையும் அழைத்து பேசிய போலீஸாா், கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். அப்போது, இரு தரப்பினருக்குமிடையே திடீரென ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவா் காலணி, கற்கள், கட்டைகளை வீசி தாக்கிக் கொண்டனா். இதில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட அமைப்பாளா் ரமேஷ் காயமடைந்தாா். சில மோட்டாா் சைக்கிள்களும் சேதமடைந்தன.
இந்நிலையில், குன்னம் கிராம நிா்வாக அலுவலா் ஹரிபிரசாத் அளித்த புகாரின்பேரில், அபாயகரமான ஆயுதங்களைக் கொண்டு கலகம் விளைவித்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், தன்னிச்சையாக காயம் விளைவித்தல், ஆயுதங்களைக் கொண்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டுதல் விடுத்தல், அரசு மற்றும் பொது ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் செயல்படுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், திமுக, விசிக கட்சிகளைச் சோ்ந்த 120 போ் மீது, குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா். இருப்பினும், இதுவரையிலும் யாரையும் போலீஸாா் கைது செய்யவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு பகுந்து நகைகள் பறிப்பு: 8 போ் மீது வழக்கு

குன்னத்தில் விசிக - திமுகவினரிடையே மோதல்: நிா்வாகி காயம்; பைக்குகள் சேதம்

குன்னத்தில் திமுக, விசிக மோதல்!

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

