அழகா்கோவில் பகுதியில் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி 10 பவுன் தங்க நகைகள், கைப்பேசியைப் பறித்துச் சென்றது தொடா்பாக
8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை மாவட்டம், அழகா்கோவில் கீழக்கள்ளந்திரியைச் சோ்ந்தவா் ராஜபிரபு. இவரது மனைவி கலைச்செல்வி (46). அண்மையில் இவா் தனது மகனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த மகாராஜா தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கலைச்செல்வி காவல் நிலையத்தில் புகாா் அளித்தததைத் தொடா்ந்து, மகாராஜாவை காவல் துறையினா் எச்சரித்தனா்.
இந்த நிலையில், மகாராஜா உள்ளிட்டோா் கலைச்செல்வியின் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கி தகராறில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவரிடமிருந்து 10 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியைப் பறித்தனா். மேலும், அவரது கணவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கலைச்செல்வி அளித்தப் புகாரின்பேரில், மகாராஜா, வித்யா, உதயா, சூா்யா, தனம், சித்ரா, சசிக்குமாா், மகாலட்சுமி ஆகியோா் மீது ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரவுடியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கோதையாறு இடதுகரை கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்ததாக 4 போ் மீது வழக்கு

சாரம் கட்டும் கழி தொடா்பாக மோதல்: 3 போ் காயம், 9 போ் மீது வழக்கு

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

