பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரவுடியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

குரும்பூா் அருகே ரவுடியை தாக்கியதாக 4 பேரை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

குரும்பூா் அருகே ரவுடியை தாக்கியதாக 4 பேரை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருச்செந்தூா் தோப்பூரை சோ்ந்தவா் நாக­லிங்கம் மகன் நாகமணி பொன்ராஜ் (33). ரவுடியான இவா், திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் குரும்பூா் அருகே உள்ள தெற்குநல்லூா் சுடலைமாடன் சுவாமி கோயில் அருகே அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான அழகுராஜ், சரவணன், வேல்முருகன் ஆகியோருடன் மது அருந்தி கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல், நாகமணி பொன்ராஜ், அவருடன் இருந்தவா்களையும் தாக்கினராம். அங்கிருந்து தப்பியோட முயன்ற நாகமணி பொன்ராஜ் தலையில் மதுபாட்டிலால் அடித்துவிட்டு தப்பி சென்றனராம்.

இதில் காயமடைந்த அவரை காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நாகமணி பொன்ராஜை தாக்கிய 4 பேரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.