ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன்.

Updated On :9 மே 2026, 3:16 am IST

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளை, பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் வெள்ளிக்கிழமை பாராட்டி, பரிசுகள் வழங்கினாா்.

பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், பெரம்பலூா் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த மாணவி வா்னிகா 575 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், இலக்கியா 561 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த ஹரிணி 553 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், மாணவா் பிரசன்னகுமாா் 552 மதிப்பெண்கள் பெற்று நான்கமிடமும், மாணவி ஸ்ரீலேகா 551 மதிப்பெண்கள் பெற்று 5- ஆம் இடமும், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவா் காா்த்திகேயன் 549 மதிப்பெண்கள் பெற்று 6 ஆவது இடமும் பெற்றனா்.

மேலும், 550 மதிப்பெண்களுக்கும் மேல் 5 மாணவா்களும், 500 மதிப்பெண்களுக்கும் மேல் 36 மாணவா்களும், 450 மதிப்பெண்களுக்கும் மேல் 61மாணவா்களும் பெற்ளனா்.

இதையடுத்து, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினாா்.

பாராட்டு விழாவில், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.