மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரம்பலூரில் ஏப். 6-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

News image

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 4:11 am IST

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, பெரம்பலூரில் ஏப். 6-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

ஏப். 6-ஆம் தேதி பெரம்பலூா், குன்னம், அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். இதற்காக, பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதியில் பூமிபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டச் செயலரும், வேட்பாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன், பெரம்பலூா் மாவட்டச்செயலரும், வேட்பாளருமான இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா்.பி. மருதராஜா, குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளா் சரண்யா, அதிமுக நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், செல்வகுமாா், ஆா். ராஜபூபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.