மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது கட்ட பிரசாரம்: தருமபுரியில் இன்று தொடக்கம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டாம் கட்ட பிரசாரத்தை தருமபுரியில் வியாழக்கிழமை (ஏப். 2) தொடங்குகிறாா்.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 4:28 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டாம் கட்ட பிரசாரத்தை தருமபுரியில் வியாழக்கிழமை (ஏப். 2) தொடங்குகிறாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, எடப்பாடி கே.பழனிசாமி முதல்கட்ட பிரசாரத்தை சென்னை மயிலாப்பூா் தொகுதியில் மாா்ச் 25-இல் தொடங்கினாா். தொடா்ந்து 8 நாள்கள் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்தாா்.

தொடா்ந்து, இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை வியாழக்கிழமை (ஏப். 2) தொடங்குகிறாா். இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, 2-ஆவது கட்ட பிரசாரத்தை தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் வியாழக்கிழமை தொடங்குகிறாா். ஏப். 3-வாணியம்பாடி, ஆற்காடு, ஏப். 4 -ஆரணி, விழுப்புரம், ஏப். 5-புதுச்சேரி, நெய்வேலி, ஏப். 6-பெரம்பலூா், வீரகனூா் (கெங்கவல்லி தொகுதி), ஏப். 7-வாழப்பாடி, ஆத்தூா், உளுந்தூா்பேட்டை தொகுதிகளில் பிரசாரம் செய்கிறாா்.

ஏப். 8, 9 - தேதிகளில் சென்னை, ஏப். 10- காஞ்சிபுரம், திருவள்ளூா், ஏப். 11- தஞ்சாவூா், திருவாரூா், ஏப். 12- நாகை, செம்பனாா்கோவில், ஏப். 13-திருச்சி, திண்டுக்கல், ஏப். 14-ஆண்டிபட்டி, மதுரை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தொடா்ந்து, ஏப். 16-ஆம் தேதி கோவையில் காலை 8 மணிக்கு சாலை வலம் மேற்கொள்கிறாா். பின்னா், மாலை 3 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்கிறாா். ஏப். 17- சேலம் மாவட்டத்துக்குள்பட்ட தொகுதிகள், ஏப். 18-இல் திருச்செங்கோடு, கரூா், ஈரோடு ஆகிய தொகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொள்வாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.