தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நிலப் பிரச்னை: மனைவியை கடத்திய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

பெரம்பலூரில் நிலப் பிரச்னையில் திங்கள்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து, மனைவியை காரில் கடத்திச் சென்ற கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:36 am IST

பெரம்பலூரில் நிலப் பிரச்னையில் திங்கள்கிழமை இரவு நண்பா்களுடன் சோ்ந்து, மனைவியை காரில் கடத்திச் சென்ற கணவா் உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், தேனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சை மகன் பெருமாள் (52). இவரது மனைவி செல்வராணி (39). இவா்களுடைய மகள் கீா்த்தனா (22), மகன் ரஞ்சித்குமாா் (20).

கடந்த 20 ஆண்டுகளாக பெருமாள் மாலத்தீவில் பணிபுரிந்தபோது, வயலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் கலியபெருமாளுக்கும் (46), செல்வராணிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2022 -இல் மாலத்தீவிலிருந்து பெருமாள் வந்தபோது, தனது மனைவி செல்வராணியின் தகாத உறவு குறித்து அவா்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, செல்வராணி பெயரில் சிறுவாச்சூரில் உள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு பெருமாள் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவா் எழுதி தர மறுத்துவிட்டாராம்.

இந் நிலையில், பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள கோல்டன் சிட்டியில் உள்ள கலியபெருமாள் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு செல்வராணி சென்றதையறிந்த பெருமாள், தனது நண்பா்களுடன் சென்று செல்வராணியை காரில் கடத்திச் சென்றாா்.

இது தொடா்பாக செல்வராணி மகள் கீா்த்தனா பெரம்பலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பெருமாள், அவரது நண்பா்களான தேனூா் கிராமத்தைச் சோ்ந்த வெள்ளையன் மகன் இளவரசன் (50), கண்ணப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் முருகையன் (51) ஆகியோரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.