மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: பெரம்பலூரில் திமுக, விசிக-வினா் கருப்புக் கொடியேற்றி ஆா்ப்பாட்டம்

மத்தியில் அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கருப்புக் கொடியேற்றி வரைவு நகலை கிழித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பெரம்பலூா் மாவட்ட திமுக அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:06 am IST

மத்தியில் அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கருப்புக் கொடியேற்றி வரைவு நகலை கிழித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்களவை சிறப்புக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில், திமுக வேட்பாளா் ஜெயலட்சுமி, தொகுதி பாா்வையாளா் சித்தாா்த்தன் ஆகியோா் முன்னிலையில், கருப்பு உடைந்து அணிந்து கருப்புக்கொடி ஏற்றி, வரைவு நகலை கிழித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினா் அட்சயகோபால், மாநில நிா்வாகிகள் பி. துரைசாமி, ராஜேந்திரன், பரமேஷ்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா், மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பிலும் போராட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.