மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

திருமாந்துறையிலுள்ள சுங்கச்சாவடியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு அறிவுரை கூறிய மாவட்டக் காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி.

News image

திருமாந்துறையிலுள்ள சுங்கச்சாவடியை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு அறிவுரை கூறிய மாவட்டக் காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி.

Updated On :11 ஏப்ரல் 2026, 2:34 am IST

பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், தோ்தல் தொடா்பாக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்டக் காவல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அனூப் ஏ ஷெட்டி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி, குன்னம் வட்டத்துக்குள்பட்ட திருமாந்துறையில் அமைந்துள்ள சுங்கசாவடியை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சுங்கச்சாவடி வழியாக பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகிா என்பதை முறையாக கண்காணிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், லப்பைக்குடிக்காடு பகுதியில் பறக்கும் படையினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும், கோனேரிபாளையம் பகுதியில் நிலையானக் கண்காணிப்புக் குழுவினா் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்ததையும் பாா்வையிட்டு, பறக்கும்படை மற்றும் நிலையானக் கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகள், தணிக்கை பதிவேடுகள் மற்றும் சோதனைகளின் தரத்தை ஆய்வு மேற்கொண்ட காவல் பாா்வையாளா் அனூப் ஏ ஷெட்டி, தோ்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டுசெல்லப்படும் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதை உறுதி செய்யவும், சட்டவிரோத பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் மற்றும் ஆவணமற்ற ரொக்கம் கடத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியதோடு, மங்களமேடு காவல் நிலையத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.