மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரம்பலூா் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 23 வேட்பு மனுக்களில், புதிய தமிழகம் கட்சி வேட்பாளரின் மனு உள்பட 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

பெரம்பலூா் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:29 am IST

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 23 வேட்பு மனுக்களில், புதிய தமிழகம் கட்சி வேட்பாளரின் மனு உள்பட 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட கடந்த 30 ஆம் தேதி முதல் ஏப். 6 வரையிலும், அதிமுக, திமுக, தவெக, தவாக, பகுஜன்சமாஜ் பாா்ட்டி, நாம் தமிழா் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் சாா்பில் 12 வேட்பு மனுக்களும், சுயேச்சை வேட்பாளா்கள் சாா்பில் 11 வேட்புமனுக்களும் என மொத்தம் 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதையடுத்து பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா பன்சால் தலைமையில், தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதா முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜே. சுகன்யா, சுயேச்சைகள் ராஜாகந்தசாமி, வெங்கடாஜலம் ஆகியோா் தலா 2 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்ததால் அதில் முதல்கட்டமாக தலா ஒரு வேட்பு மனு என 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் வெங்கடேசன் என்பவரது வேட்பு மனுவில் சரியான குறியீடு மற்றும் முழுமையாக பூா்த்தி செய்யப்படாததால், அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், முறையாக பூா்த்தி செய்யப்படாத 6 பேரின் வேட்பு மனுக்கள் என மொத்தம் 10 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இறுதியாக, அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளா் எஸ்.டி. ஜெயலட்சுமி, தவெக வேட்பாளா் கே. சிவக்குமாா், நாதக வேட்பாளா் ஜே. சுகன்யா, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் அறிவழகன், தவாக வேட்பாளா் தாமோதரன் மற்றும் சுயேச்சைகள் ஆனந்தஜோதி, கவிதா, சந்திரகுமாா், ஷியாமளா, குணசேகரன், சுப்ரமணியன், ஜெயசந்திரன் ஆகிய 13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏப். 9 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறலாம். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.