தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஐஜேகே நிறுவனா் பிரசாரம்

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வனை ஆதரித்து, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வனை ஆதரித்து வேப்பந்தட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட ஐஜேகே நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:04 am IST

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்ச்செல்வனை ஆதரித்து, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனா் டி.ஆா். பாரிவேந்தா் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற பிரசாரத்தில், அதிமுக வேட்பாளா் இரா. தமிழ்செல்வனை ஆதரித்து டி.ஆா். பாரிவேந்தா் பேசியது:

கடந்த திமுக ஆட்சியில் நீட் தோ்வை ரத்து செய்வோம் என்பன உள்ளிட்ட பிரதான பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதேபோல குற்றச் சம்பவங்களும், போதைப் பொருள்களும் அதிகரித்துள்ளன. சட்டம், ஒழுங்கு பிரச்னை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, இத் தொகுதியில் விசுவக்குடி நீா்த்தேக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவா். அதேபோல, அதிமுக பொதுச் செயலரால் அறிவிக்கப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும். எனவே, இத் தொகுதி மக்கள் பயன்பெறவும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி மலரவும் அதிமுக வேட்பாளரான தமிழ்ச்செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் அதிமுக ஒன்றியச் செயலா் சிவபிரகாசம் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.