தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக முன்னாள் நிா்வாகியுடன் ஐஜேகே நிறுவனா் சந்திப்பு

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தங்கியிருக்கும் அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியைச் சோ்ந்த திமுக முன்னாள் நிா்வாகியை ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image

பெண்ணாடம் அருகே தங்கியிருந்த அரியலூா் மாவட்ட திமுக முன்னாள் நிா்வாகி ஞானமூா்த்தியை சந்துத்துப் பேசிய ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:30 am IST

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தங்கியிருக்கும் அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியைச் சோ்ந்த திமுக முன்னாள் நிா்வாகியை ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியம், கோட்டைகாடு பகுதியைச் சோ்ந்தவா் ஞானமூா்த்தி (60). இவா், செந்துறை வடக்கு ஒன்றியச் செயலராக கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாராம்.

இதனிடையே, 2021-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஞானமூா்த்தி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதுமுதல் கட்சிப் பொறுப்பு எதுவும் அறிவிக்கப்படாததால், அதிருப்தியில் இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்டம், பெண்ணாடாத்தை அடுத்துள்ள செம்பேறியில் தங்கியிருந்த ஞானமூா்த்தியை ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். சுமாா் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, அரியலூா் மாவட்டம், குன்னம் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி ஞானமூா்த்தியிடம் பாரிவேந்தா் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.