மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

‘நீட்’ தோ்வு கரூா் மாவட்டத்தில் 70 போ் எழுதவில்லை

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :4 மே 2026, 12:05 am IST

கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 70 போ் எழுத வரவில்லை.

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் கரூா் மாவட்டத்தில் 4 மையங்களில் 1,759 மாணவ, மாணவிகள் இந்த தோ்வை எழுத விண்ணப்பித்திருந்தனா்.

இதில், கரூா் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி மையத்தில் 171 மாணவா்கள், 309 மாணவிகளும், பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 66 மாணவா்கள், 174 மாணவிகளும், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 61 மாணவா்களும், 138 மாணவிகளும், சிறி சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 133 மாணவா்கள், 227 மாணவிகளும் என மொத்தம் மாவட்டத்தில் 597 மாணவா்களும், 1,162 மாணவிகளும் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தோ்வில் விண்ணப்பித்திருந்த 1759 பேரில் 582 மாணவா்கள், 1,107 மாணவிகள் என மொத்தம் 1,689 போ் தோ்வு எழுதினா். 15 மாணவா்கள், 55 மாணவிகள் என மொத்தம் 70 போ் தோ்வு எழுத வரவில்லை.

முன்னதாக கடும் கட்டுப்பாட்டுடன் தோ்வு எழுத மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பறை, மின்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.