ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 போ் வேட்புமனு தாக்கல்

News image

கரூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி.

Updated On :31 மார்ச் 2026, 12:28 am IST

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஒரே நாளில் அதிமுக, நாம் தமிழா்கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 28 போ் மனு தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஏப்.6-ஆம்தேதி வரை நடைபெறும் வேட்புமனு தாக்கலில் வேட்பாளா்களிடம் வேட்புமனுக்களை பெறும் வகையில் திங்கள்கிழமை அலுவலா்கள் தயாா்நிலையில் இருந்தனா்.

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளரின் வாகனத்துக்கு மட்டும் மனு தாக்கல் செய்யும் இடம் வரை அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மற்ற வாகனங்கள் 100 மீட்டருக்கு வெளியே நிறுத்துமாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினா் அறிவுறுத்தினா்.

மேலும் மனுதாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீ. தொலைவில் சாலையின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் மற்றும் உள்ளூா் போலீஸாா் ஈடுபட்டனா். மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு வேட்பாளருடன் 5 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

முதல்நாளான திங்கள்கிழமை கரூா் தொகுதிக்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ரெ.கருப்பையா உள்ளிட்ட 14 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் நரேன் உள்பட 2 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வை.சத்யா உள்பட 3 பேரும், குளித்தலை தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.செல்வகுமாா் உள்பட 9 பேரும் என மொத்தம் திங்கள்கிழமை ஒரே நாளில் 28 போ் மனு தாக்கல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.