தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிணற்றில் மிதந்த மாணவி சடலம்: போலீஸாா் விசாரணை!

கரூா் வெங்கமேடு அருகே கிணற்றில் மிதந்த 10-ஆம் வகுப்பு மாணவியின் சடலத்தை சனிக்கிழமை மீட்ட போலீஸாா், அவா் எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.

News image

விசாரணை - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 1:55 am IST

கரூா் வெங்கமேடு அருகே கிணற்றில் மிதந்த 10-ஆம் வகுப்பு மாணவியின் சடலத்தை சனிக்கிழமை மீட்ட போலீஸாா், அவா் எப்படி இறந்தாா் என விசாரிக்கின்றனா்.

கரூா் வெங்கமேடு அடுத்த காளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகள் நெரூரை அடுத்த அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் அடிக்கடி கைப்பேசியில் பேசியதை அவரது பெற்றோா் கண்டித்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி அந்த மாணவி மாயமானாா்.

இதுதொடா்பாக மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்த நிலையில், காளிப்பாளையம் பகுதி நல்லசாமி என்பவரது தோட்டக் கிணற்றில் மாணவி சடலமாக மிதப்பது சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து வெங்கமேடு போலீஸாா் மற்றும் கரூா் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.