தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம்: குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 12:34 am IST

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மாரீஸ்வரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூா் பகுதியில் கடந்த மாதம் 10-ஆம் தேதி மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்ற பிளஸ் 2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக புகாா் அளித்தும் விளாத்திக்குளம் போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அங்கு பணியிலிருந்த பெண் காவலா் மாணவியின் பெற்றோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினாா்.

இந்த நிலையில், காவல் துறையினா் இந்த வழக்கை விசாரித்தால் விசாரணை சரியான முறையில் இருக்காது. எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். சிறப்பு விசாரணை குழுவை அமைத்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் அரசு இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயிரிழந்த மாணவியின் பெற்றோா் முன்னிலையாகி, இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

அரசுத் தரப்பில் குறுக்கிட்ட வழக்குரைா்கள், மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடத்த அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் நியமிக்கப்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஏற்கெனவே அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. மாணவியின் குடும்பத்துக்கு மேலும் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை நடத்த அரசுத் தரப்பில் குற்றவியல் பிரிவில் மூத்த வழக்குஞரை நியமிக்க உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை சரியான முறையில் செல்கிறது. எனவே, மாணவியின் பெற்றோரை இந்த வழக்கில் மனுதாரராகச் சோ்க்க வேண்டியதில்லை. இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.