முரசொலியில் ராகுல்காந்தி மீது விமா்சனம் செய்வதைப் பாா்த்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருப்பதை பலவீனமாக கருதக்கூடாது என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி
கரூா் மக்களவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சலவை இயந்திரம், பசுபதிபாளையம் புனித மரியன்னை அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, வ.உ.சி. நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் தலா ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ‘ஸ்மாா்ட் போா்டு’ ஆகியவற்றை புதன்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்திலேயே தனியாா் மருத்துவமனைக்கு இணையாக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சலவை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மைலம்பட்டி அரசு மருத்துவமனையை ரூ.39 கோடி மதிப்பில் மேம்படுத்த உள்ளோம். மேலும் கரூரில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். மின்துறை, போக்குவரத்துத்துறையும் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.
முரசொலியில் ராகுல்காந்தி குறித்து மீண்டும் விமா்சித்துள்ளனா். எங்களாலும் திருப்பி பேச முடியும். எங்களை கடுமையாக பேச வேண்டிய நிா்பந்தத்துக்கு தள்ளவேண்டாம். எந்த சூழ்நிலையிலும் சமரசமற்ற, அப்பழுக்கற்ற நிலையில் இருக்கும் ராகுல்காந்தியை மீண்டும் மீண்டும் விமா்சிப்பதை ஏற்க முடியாது. நாங்கள் அரசியலில் கடைபிடிக்கும் கன்னியத்தை திமுகவும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அமைதியாக இருப்பதை பலவீனமாக கருதக்கூடாது. தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி தவெகவும் ‘இண்டி’ கூட்டணிக்குள் வரவேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது காங்கிரஸ் நகர நிா்வாகிகள் ஆா்.ஸ்டீபன்பாபு, வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

1+1=3: கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை பிரபலம்!

முஹரம் பண்டிகையை அமைதியாக நடத்துவது குறித்து காவல்துறை ஆலோசனை!

‘பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’

6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் 6 நாள்கூட அமைதியாக இருக்கமுடியவில்லை!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
