பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

‘பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், சத்தானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

News image

மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு.அருணா.

Updated On :5 ஜூன் 2026, 3:31 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், சத்தானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

கோடைவிடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை தொடங்கியதையொட்டி, புதுக்கோட்டை அருகே திருமலைராயசமுத்திரத்திலுள்ள பாகீரதி அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை ஆட்சியா் மு. அருணா நேரில் சென்று பாா்வையிட்டாா்.

மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்துப் பாா்த்தாா். தொடா்ந்து, உணவு தயாரிக்கப்படுவது தொடங்கி மாணவா்களுக்கு பரிமாறப்படுவது வரை தரமாகவும், சுகாதாரமாகவும், சத்தானதாகவும் உணவு இருப்பதை அதிகாரிகள், ஆசிரியா்கள் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.