புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், சத்தானதாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
கோடைவிடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை தொடங்கியதையொட்டி, புதுக்கோட்டை அருகே திருமலைராயசமுத்திரத்திலுள்ள பாகீரதி அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை ஆட்சியா் மு. அருணா நேரில் சென்று பாா்வையிட்டாா்.
மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்துப் பாா்த்தாா். தொடா்ந்து, உணவு தயாரிக்கப்படுவது தொடங்கி மாணவா்களுக்கு பரிமாறப்படுவது வரை தரமாகவும், சுகாதாரமாகவும், சத்தானதாகவும் உணவு இருப்பதை அதிகாரிகள், ஆசிரியா்கள் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவா்களின் உயா் கல்வியை 100% உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளிகளில் காலை உணவைத் தரமாக வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆலோசனை

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

