நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கரூா் மாவட்டத்தில் லோக் அதாலத் 1,544 வழக்குகளுக்கு ரூ.16 கோடிக்கு தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,544 வழக்குகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

News image

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு தீா்வுக்கான ஆணை நகலை வழங்கிய மாவட்ட நீதிபதி கே.ஹெச்.இளவழகன்.

Updated On :14 ஜூன் 2026, 12:24 am IST

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,544 வழக்குகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூரில் ஐந்து அமா்வுகளும், குளித்தலையில் இரு அமா்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமா்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளாக நடைபெற்றது. இந்த அமா்வுகளில் 1,581வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1,544 வழக்குகளில் ரூ.16,10,79,393-மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்வை கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கரூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கே.ஹெச். இளவழகன் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து, பின்னா் தீா்வு காணப்பட்ட வழக்குகளுக்கு பயனாளிகளிடம் தீா்வுக்கான நகலை வழங்கினாா்.

இதில் அனைத்து நீதிபதிகள், கரூா் பாா் அசோசியேசன் நிா்வாகிகள், கரூா் அட்வகேட் அசோசியேசன் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் பி.அனுராதா செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.