கரூா் மாவட்டம், தென்னிலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற உழவா் விழாவில் விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம் க.பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் சாா்பில் உழவா் விழா தென்னிலை தெற்கு ஊராட்சிக்குட்பட்ட பி. நல்லிபாளையத்தில் நடைபெற்றது. வேளாண்மை துறை உதவி இயக்குநா் ஸ்ரீப்ரியா தலைமை வகித்தாா்.
விழாவில் வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) கோவிந்தசாமி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், விவசாய அடையாள எண்ணின் முக்கியத்துவம், மண் வளப் பாதுகாப்பு, முருங்கை சாகுபடி மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்துப் பேசினாா்.
தொடா்ந்து கரூா் வேளாண்மைக் கல்லூரி பேராசிரியா் கந்தசாமி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கிருத்திகா ஆகியோா் பயிா்களில் விவசாயிகளுக்கு தேவையான புது ரகங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினா். விழாவில் முருங்கை விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘விவசாயிகளுக்கு அடையாள எண் இருந்தால் மட்டுமே மானிய திட்டங்கள் பெற முடியும்’

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

