கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு திருச்சி மற்றும் திருச்சி-பாலக்காடு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில்வே யாா்டில் மின் பொறியியல் பராமரிப்பு பணிகள் ஜூன் 9-ஆம்தேதி மற்றும் 16, 23, 30-ஆம்தேதிகளில் நடைபெறுகிறது. இதனால் ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் ஈரோடு - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், ஜூன் 9, 16, 23, 30-ஆம்தேதிகளில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்தில் 30 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.
இதேபோல திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு நகர விரைவு ரயில், 25 நிமிஷங்கள் தாமதமாக திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

பாலக்காடு டவுன் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

