மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூா் வழியாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 3:52 am IST

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூா் வழியாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் - திருச்சி வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் மே 1, 2-ஆம்தேதி, 4, 5-ஆம் தேதிகளில் குளித்தலை ரயில்நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். தண்டவாள பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் குளித்தலையிலிருந்து திருச்சி சந்திப்பு வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

இதேபோல திருச்சி சந்திப்பிலிருந்து நண்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் மே 1-ஆம்தேதி எலமனூா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் நிற்கும் அதே நிறுத்தங்களில், எலமனூரிலிருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.