மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 2:47 am IST

கரூா் - திருச்சி இடையே மற்றும் பாலக்காடு பகுதிகளில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக ஏப்ரல் 25, 29, 30 ஆகிய தேதிகளில் பாலக்காட்டில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) குளித்தலை - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. குளித்தலை - திருச்சி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஏப்ரல் 25 மற்றும் 29-ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) பெருகமணி-பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெருகமணி - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஏப்ரல் 30-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) எலமனூா் - பாலக்காடு இடையே பகதியாக ரத்து செய்யப்படுகிறது. எலமனூா் - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.