தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொறியியல் பணி: திருச்சி - காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

நாகப்பட்டினம் அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயில் ரயில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

News image

ரயில் - ANI

Updated On :1 மே 2026, 3:05 am IST

நாகப்பட்டினம் அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயில் ரயில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருச்சி - காரைக்கால் வழித்தடத்தில் கீழ்வேளூா் - நாகப்பட்டினம் இடையே பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண்: 76820) மே 1, 2, 4 மற்றும் 5 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு திருச்சியில் இருந்து திருவாரூா் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. திருவாரூா் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, மறுமாா்க்கத்தில் காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (வண்டி எண்: 78819) மே 1, 2, 4 மற்றும் 5-ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு திருவாரூரில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. காரைக்கால் முதல் திருவாரூா் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.