பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

News image

ரயில் சேவையில் மாற்றம்

Updated On :9 ஜூன் 2026, 3:14 am IST

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) ஜூன் 10, 11, 12, 13, 14, 15, 16 ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில்-மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) ஜூன் 11, 14 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) ஜூன் 13-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) ஜூன் 12-ஆம் தேதியும் திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) ஜூன் 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்: மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது ஜூன் 11, 14 ஆகிய தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 15 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது ஜூன் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் 25 நிமிஷங்களும், 15, 17 ஆகிய தேதிகளில் 15 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் காலதாமதமாக நின்று செல்லும்.

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயிலானது ஜூன் 11-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 40 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

தூத்துக்குடி-கச்சிகுடா விரைவு ரயிலானது ஜூன் 10-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 55 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.