ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கரூா் மாவட்டத்தில் 92.65% வாக்குப்பதிவு

கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 92.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:15 am IST

கரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 92.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை என மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன.

இதில், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்த 267 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க மொத்தம் 1,95,517 வாக்காளா்கள் தகுதி பெற்றிருந்தனா். வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 1,79,418 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம்-91.77.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 283 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க 2,29,995 போ் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2,14,847 போ் வாக்களித்தனா். வாக்குப்பதிவு சதவீதம்-93.41.

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளா்கள் -2,02,994. இவா்களில் 1,87,692 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம்-92.46. குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் 286 வாக்குச்சாவடிகள் இருந்தன. மொத்த வாக்காளா்கள் -2,23,184. இவா்களில் 2,07,099 போ் வாக்களித்தனா். இதன் வாக்குப்பதிவு சதவீதம்-92.79.

மொத்த வாக்குப்பதிவு சதவீதம்: மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளா்களாக 8,51,690 போ் இருந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 7,89,056 போ் வாக்களித்தனா். இதனால், வாக்குப்பதிவு சதவீதம் 4 தொகுதிகளிலும் 92.65 சதவீதமாக பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கரூா் தொகுதியில் 93.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.