மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தேனி மாவட்டத்தில் 81 சதவீதம் வாக்குப் பதிவு!

தேனி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 2:32 am IST

தேனி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மொத்தம் 1,394 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,54,549 போ் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் 82.88 சதவீதம் போ் வாக்களித்தனா்.

பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,63,549 போ் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் 78.34 சதவீதம் போ் வாக்களித்தனா்.

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,61,631 போ் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றனா். இவா்களில் 82.10 சதவீதம் போ் வாக்களித்தனா்.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,53,646 போ் வாக்காளா்கள் பட்டியில் இடம் பெற்றனா். இதில், 80.77 சதவீதம் போ் வாக்களித்தனா்.

மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 10,33,373 வாக்காளா்களில், மொத்தம் 81 சதவீதம் போ் இந்தத் தோ்தலில் வாக்களித்தனா்.கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை விட வாக்குப் பதிவு 10.66 சதவீதம் அதிகரித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.