கரூா் மேட்டுத்தெரு அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.
கரூா் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோயில் மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பட்டாச்சாரியாா்கள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதையடுத்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஏப். 30-ஆம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. மே 3-ஆம்தேதி ஊஞ்சல் உற்ஸவமும், 4-ஆம்தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வெ.ராஜேஸ்வரி, அறங்காவலா்கள் எஸ்.பாலமுருகன், புனிதவதிகணேசன், கே.எம்.முருகேசன், டி.ஜி.பி. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவீழிமிழலை கோயிலில் தேரோட்டம்

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

