தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஏமூா்புதூரில் கூடுதல் பேருந்து வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தாா் கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.

News image

ஏமூா்புதூரில் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்குகள் சேகரித்த கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா. உடன் ஒன்றியச் செயலா் எம். ரகுநாதன் உள்ளிட்டோா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 1:43 am IST

ஏமூா்புதூரில் கூடுதல் பேருந்து வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தாா் கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே. ராஜா.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வேடா்தெரு, மலையப்பநகா், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், கோவக்குளம் தெற்கு, ஏமூா்புதூா், நடுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்த அவா் பேசியது:

திமுக ஆட்சியில்தான் மாயனூா் கதவணை கட்டப்பட்டு 0.4 டிஎம்சி தண்ணீா் தேக்கப்படுகிறது. இதன் மூலம் மாயனூரைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி, குடிநீா் வசதி பெறுகின்றன. இதேபோல காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் வெட்டியதும் திமுக ஆட்சியில்தான். இதுபோன்று திட்டங்களைச் செயல்படுத்தி வேளாண் தொழிலை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதும் திமுகதான்.

தமிழகத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் திமுகவுக்கு என்றென்றும் ஆதரவாக இருங்கள். ஏமூா்புதூா் பகுதிக்கு கூடுதலாக பேருந்து, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் எம். ரகுநாதன், திமுக மாவட்ட துணைச் செயலா் பூவை. ரமேஷ்பாபு மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.