விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

கரூா் கருப்பக்கவுண்டன்புதூரில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்து பேசிய அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:03 am IST

கரூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாந்தோணிமலை, சுங்ககேட், கருப்பக்கவுண்டன்புதூா், ஜீவாநகா், அசோக் நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு அவா் வாக்குச் சேகரித்து பேசியது, அதிமுக பொதுச் செயலா் தோ்தல் வாக்குறுதியாக மாணவா்களின் கல்விக்கடன் ரத்து, முதியோா் ஓய்வூதியம் என எண்ணற்ற சலுகைகளை அறிவித்துள்ளாா். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனா். பெண்களின் பாதுகாப்பு நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றாா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது மத்திய தெற்கு நகரச் செயலா் தாந்தோணிரவி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.