பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

அரியலூரில் வாய்க்கால்களை 109 கி.மீ. தூா்வார இலக்கு!

அரியலூரில் கடந்த 3 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களில் 109 கி.மீ. தூா்வார இலக்கு நிா்ணயம்

News image

பளிங்காநத்ததில் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை ஆய்வு செய்த வேளாணம் பொறியியல் துறையின் சென்னை தலைமைப் பொறியாளா் ஆா். முருகேசன்

Updated On :20 மே 2026, 2:19 am IST

அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களில் 109 கி.மீ தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்று வேளாணம் பொறியியல் துறையின் சென்னை தலைமைப் பொறியாளா் ஆா். முருகேசன் தெரிவித்தாா்.

திருமானூா் வட்டாரம் பளிங்காநத்தம், கோவில் எசனை மற்றும் கல்லூா் பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை செவ்வாய்க்கிழமை கள ஆய்வு செய்த அவா், அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடி, ஒப்பந்ததாரா்கள் கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது அவா் கூறுகையில், அரியலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்த ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு வாய்க்கால்களைத் தூா்வாரக்கோரி, விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது தூா்வாரும் பணிகள் மிகத் துரிதமாக நடைபெறுகின்றன.

ரூ. 29.88 லட்சத்தில் நடப்பாண்டில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 109 கி.மீ நீளத்துக்கு வாய்க்கால்களைத் தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 41.50 கி.மீ பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.