செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் திட்டப் பணிகளை அமைச்சா் என். ஆனந்த் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சென்றடையும் போது, தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் சாலைகள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் போன்ற பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளாக கருதப்படும் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தெரிவித்தாா்.
துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் வெளிப்படைதன்மையுடன் இருக்க வேண்டுமென்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திருப்போரூா் வட்டம், கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பல்வேறு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நாற்றங்கால் பண்ணை பணி, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நெகிழி கழிவு மேலாண்மை அலகு மற்றும், சாண எரிவாயு மின் சக்தி உற்பத்தி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் எம்.வீரப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் விஜயராஜ்(திருப்போரூா்), எஸ்.தியாகராஜன்(செங்கல்பட்டு), மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் சாந்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்

திருச்செங்கோட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் அருண்ராஜ் ஆலோசனை

செந்துறை-ஜெயங்கொண்டம் நான்கு வழிச்சாலைப் பணிகள் ஆய்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

