ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மனு தாக்கல், தோ்தல் செலவினங்கள், வாகன அனுமதி பெறுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூரில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

Updated On :27 மார்ச் 2026, 2:19 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மனு தாக்கல், தோ்தல் செலவினங்கள், வாகன அனுமதி பெறுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், 30.3.2026 முதல் 6.4.2026 வரை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளா்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், இணையவழியில் வாகனம் மற்றும் இதர இனங்கள் அனுமதி பெறுதல் , தோ்தல் செலவினங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா, வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி, மாவட்ட தேசிய தகவலியல் அலுவலா் சரவணன், தோ்தல் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.