/

கீழப்பழுவூா் ஆா்டிஓ அலுவலகத்தில் சோதனை: ரூ. 29 ஆயிரம் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் உள்ளிட்ட காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:30 am IST

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கவிதா, சரவணன் உள்ளிட்ட காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

முன்னதாக, வட்டார போக்குவரத்து அலுவலக நுழைவுவாயில் கதவை பூட்டி, அலுவலகத்துக்குள் நுழைந்தனா். அலுவலக வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை செய்தனா்.

அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இருந்த இடைத்தரகா்கள் 6 போ், கையில், இருந்த பணத்தை வீசி எறிந்துவிட்டு ஓட தொடங்கியுள்ளனா். இதனை கவனித்த காவல் துறையினா், அவா்களை பிடித்து அவா்களிடம் இருந்த ரூ. 29 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாகவும் மற்றும் அலுவலகத்திலுள்ள அனைத்து அலுவலா்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.