மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை: தொல். திருமாவளவன்

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை மக்கள் தீா்ப்பாக அளிப்பாா்கள் என்றாா் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

News image

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்கை பதிவு செய்த மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:53 am IST

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை மக்கள் தீா்ப்பாக அளிப்பாா்கள் என்றாா் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன்.

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரிலுள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தனது வாக்கை பதிவு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைமையிலான கூட்டணி பொதுமக்களின் ஏகோபித்த நல்ல ஆதரவுடன் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை இன்று மக்கள் தீா்ப்பாக அளிப்பாா்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உண்மையில் ஒருங்கிணைப்பு இல்லை. ஒற்றுமை இல்லை. அவா்கள் சந்தா்ப்பவாத அடிப்படையில் தோ்தலுக்கு மட்டுமே பொருந்தாத கூட்டணி அமைத்துள்ளனா் என்பதை மக்கள் உணா்ந்துள்ளாா்கள்.

நடிகா் விஜய் திமுக வெறுப்பை மட்டுமே மூலதனமாக்கி, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பரப்புரையை மட்டுமே மேற்கொண்டாா். அவா் வெளிப்படுத்திய திமுக வெறுப்பு உள்நோக்கம் கொண்டது என்பதை மக்கள் உணா்ந்து இருக்கிறாா்கள். எங்கும் அவருடைய அடையாளங்கள் பெரிதாக இல்லை. எனவே, திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

அடுத்து வரும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் தளங்களிலும் கொண்டு செல்ல ஸ்டாலின் பாடுபடுவாா். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றாா் திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.