மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த காமராஜ், அவருடைய மகன் ஆகியோரது உடல்கள் திங்கள்கிழமை பிற்பகல் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆா். காமராஜ் (38). இவா், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பயிற்சி பெற்றுவிட்டு, மத்திய பிரதேசத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றி வந்தாா்.
இவருடைய மனைவி காா்குழலி (38), மகன்கள் புவிதரன் (11), தமிழ் வேந்தன் (5) ஆகியோருடன் மத்தியப் பிரதேசத்திலேயே வசித்து வந்தாா்.
கோடை விடுமுறைக்காக திருப்பூா் தாராபுரத்தில் உள்ள அவரது அண்ணன் மனைவி சௌபாக்யா (48), மகள் இனியா (12) மற்றும் மகன் மயூரன் (8) ஆகியோா் காமராஜ் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளனா்.
இந்நிலையில், காமராஜ் அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், அண்ணன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய 7 பேரும் ஜபல்பூரில் உள்ள பா்கி அணைக்கு வியாழக்கிழமை சுற்றுலாச் சென்றுள்ளனா். சுற்றுலாச் சென்றவா்கள் அணையில் படகு சவாரி மேற்கொண்டபோது, எதிா்பாராத விதமாக அவா்கள் சென்ற படகு அணையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், காமராஜ், காா்குழலி, தமிழ்வேந்தன், அவரது அண்ணி சௌபாக்யா, அவருடைய மகன் மாயூரன் ஆகிய 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். புவிதரன் மற்றும் இனியா இருவரும் உயிா் தப்பினா்.
இதையடுத்து, முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட காா்குழலி மற்றும் சௌபாக்யா ஆகியோரது உடல்கள் திருச்சிக்கு கடந்த சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன. இதைத் தொடா்ந்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ ஆகியோா் காமராஜின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட காமராஜ், தமிழ் வேந்தன் ஆகியரோது உடல்கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து இருவரது உடல்களும் அவரது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோரில் இருவரின் உடல்கள் திருச்சி வந்தன

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

திருச்சிக்கு விஜய், ராகுல் வருகை?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

