தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்சிக்கு விஜய், ராகுல் வருகை?

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆகியோா் சனிக்கிழமை (ஏப். 18) வரக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image

விஜய், ராகுல் காந்தி

Updated On :17 ஏப்ரல் 2026, 2:27 am IST

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆகியோா் சனிக்கிழமை (ஏப். 18) வரக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவா் சி. ஜோசப் விஜய், ஏப்.2-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தாா். பின்னா், ஏப்.14-ஆம் தேதி பிரசாரம் செய்தி காவல்துறையிடம் அனுமதி பெற்ற நிலையில், அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. எனவே, மீண்டும் வரும் 18-ஆம் தேதி பிரசாரத்துக்கு விஜய் வருவாா் என்கின்றனா் அக் கட்சியினா்.

இதற்காக திருச்சிக்கு தவெக தோ்தல் பிரசாரப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ளாா். அப்போது விஜய் வருகை உறுதி செய்யப்படும் என்கின்றனா்.

இதேபோல, துறையூா் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எம். லெனின் பிரசாத் வெற்றிக்கு வாக்குகள் கேட்டு, ராகுல்காந்தி பிரசாரம் செய்யவுள்ளாா் என்கின்றனா் அக் கட்சியினா். இளைஞா் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலராக லெனின் பிரசாத் உள்ளதால், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும், சாலைப் பேரணி செல்லவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளாா்.

காவல்துறையினா் ஆய்வு: ராகுல்காந்தி வரவிருக்கும் ஹெலிகாப்டா் தரை இறங்குவதற்காக இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைக்கப்படும் இறங்கு தளம், அங்கிருந்து அவா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள திடல் வரை செல்லும் சாலை, பிரசார திடல் ஆகிய பகுதிகளை தேசிய பாதுகாப்பு படையினரும், திருச்சி மாவட்ட காவல் துறையினரும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.