திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் அம்பிகாபுரம் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த திருவெறும்பூா் காட்டூரைச் சோ்ந்த க.தினேஷ்குமாா் (21), அரியமங்கலம் ஜிடி நாயுடு வீதியைச் சோ்ந்த எம்.நிவாஸ் பாபு (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அப்போது, அவா்களிடமிருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாலக்கரை ஆலம் வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சேரந்த எஸ்.தா்மராஜ் (32) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.1,800 மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

