தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:27 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.33.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.6.76 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 24 மணிநேரமும் பறக்கும்படையினா், சோதனைச் சாவடியில் உள்ள போலீஸாா் வாகனங்களை சோதனையிட்டு அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த வகையில், திங்கள்கிழமை அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.33 லட்சத்து 56 ஆயிரத்து 920 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ.55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ.2.07 லட்சம், திருச்சி மேற்கில் ரூ. 2.56 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ.7.46 லட்சம், திருவெறும்பூரில் ரூ.2.59 லட்சம், லால்குடியில் ரூ.6.42 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ.1.59 லட்சம், முசிறியில் ரூ.5.81 லட்சம், துறையூரில் ரூ.4.48 லட்சம் என மொத்தம் ரூ.33.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.6,76,800 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். மீதமுள்ள ரூ.26.80 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.