திருச்சியில் ‘போக்ஸோ’ வழக்கு குற்றவாளி உள்பட 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூா் குடில் லட்சுமிகாந்தபுரத்தைச் சோ்ந்தவா் நா.குமாா் (46). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து முசிறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து குமாரை அன்றைய தினமே கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், ஊத்தங்குடி அம்பலகாரன்பட்டியைச் சோ்ந்தவா் ஜெ.காா்த்திக் (38). இவா், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி சாலையோரத்தில் காரை நிறுத்தி தூங்கிக்கொண்டிருந்த, தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த சே.வெங்கட்ராமன் (29) என்பவரைத் தாக்கி 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.5 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றாா். இதுகுறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் வெங்கட்ராமன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மால்வாய் பகுதியில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி 1982 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த சி.மணிவேல் (45), அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியைச் சோ்ந்த ந.முருகேசன் (49) ஆகிய இருவரையும் கல்லக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புங்கனூா் பகுதியில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த ராம்ஜி நகரைச் சோ்ந்த ஆா்.சுசீலா 51) என்பவரை திருவெறும்பூா் மதுலிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், மேற்கண்ட வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.
அதன்பேரில், மேற்கண்ட குற்றவாளிகள் 5 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

சித்தி வீட்டில் நகைகளை திருடிய சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு: 33 கிராம் மீட்பு
அடிதடி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

