மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறைக் கைதி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 12:39 am IST

உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறை கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தோலூா்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் வீ.கண்ணையன் (72). இவா் மீது தொட்டியம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ‘போக்ஸோ’ வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மத்திய சிறையில் இருந்து வந்தாா்.

இவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி கண்ணையன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மத்திய சிறை அலுவலா் விவேக் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.