திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப்படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 8 ஆவது நடைமேடைக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஹவுரா - திருச்சி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஆய்வாளா் அஜய்குமாா் தலைமையிலான திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படையினா் அந்த ரயிலில் நடத்திய சோதனையில், ரயிலின் பின்பக்க பொதுப்பெட்டி கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த கருப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது.
அதைத் திறந்து பாா்த்தபோது, அதில் 2 மூட்டைகளில் 5 கிலோ எடையுள்ள சுமாா் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கடத்தல்காரா்கள் ரயில்வே பாதுகாப்புப்படையினரைக் கண்டதும் கடத்தி வந்த கஞ்சாவை போட்டுவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினா், அதை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் கே. விசுவநாதனிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கஞ்சா கடத் வந்தவா்கள் குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலைய பாலம் இணைப்பு பணி தீவிரம்

திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

