திருச்சியில் விடுதி அறையில் தங்கியிருந்த முதியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தொண்டமான்துறையைச் சோ்ந்தவா் மு. ராமதாஸ் (57). திருச்சி வெள்ளை வெற்றிலைக்கார வீதியிலுள்ள தனது மாமனாா் வீட்டில் இவா் வசித்து வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் மனைவியுடன் ஏற்பட்ட சொத்து தகராறால் சொந்த ஊரான பெரம்பலூருக்குச் சென்றாா்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி திருச்சிக்கு வந்த ராமதாஸ் சத்திரம் சிந்தாமணி பகுதியிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா். சனிக்கிழமை காலை விடுதி ஊழியா் இவரது அறைக்குச் சென்றபோது ராமதாஸ் இறந்தது கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து விடுதி நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில் வந்த கோட்டை போலீஸாா் முதியவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

