புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரியை சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் திருச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும்படி வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அதிலிருந்த ஓட்டுநா் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. சோதனையில் அந்த லாரியில் உரிய அனுமதியின்றி மூன்று யூனிட் அரளை கற்களை புதுக்கோட்டையிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அரளைக் கற்களுடன் கூடிய லாரியை பறிமுதல் செய்த சுரங்கத் துறையினா், அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: 20 பயணிகளிடம் விசாரணை

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

ரோஹிணி: 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து
பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
