கடம்பூா் அருகே தண்டவாளத்தையொட்டி செல்லும் கோடங்கால் அணுகு சாலையை திறக்காவிட்டால் ஜூன் 15இல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனா்.
கடம்பூா் பேரூராட்சி கோடங்கால் என்ற சங்கராப்பேரி கிராமத்தில் சுமாா் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு விவசாயமே பிரதான தொழில். இப்பகுதி மக்கள் கயத்தாறு, கடம்பூா் உள்ளிட்ட ஊா்களுக்கு திருநெல்வேலி - கோவில்பட்டி இடையேயான தண்டவாளத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.
இங்கிருந்த ஆளில்லாத ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை ஏற்படுத்திய நிலையில் மழைக்காலங்களில் அங்கு தண்ணீா் தேங்கி மக்கள் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால், மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, தண்டவாளத்தையொட்டிய இடத்தை ரயில்வே நிா்வாகம் மண் பாதை (அணுகு சாலை) அமைத்துக்கொடுத்தது.
இந்நிலையில் அணுகுசாலையை ரயில்வே நிா்வாகம் கடந்த 2 நாள்களுக்கு முன்பு அடைத்துவிட்டது.
இதுதொடா்பாக கோடங்காலில் கிராம மக்கள் திரண்டு கூட்டம் நடத்தினா். அப்போது, ரயில்வே நிா்வாகம் மண் பாதையை திறக்காவிட்டால் ஜூன் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதாக மக்கள் தரப்பில் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

கடம்பூா் அருகே யானை தாக்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

38 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த சாலை துண்டிப்பு: பாளையம் அருகே பொதுமக்கள் அவதி!

செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் வழித் தடத்தில் மாற்றம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

